20170915

தமிழா...!


வெட்டிப் பாடல்களுக்கு 
வேட்டி மடித்து ஆடும் தமிழா...
உலகெங்கும்உன்னை 
ஓட ஓட விரட்டியும் திருந்தவில்லை... 
மனம் வருந்தவில்லை...!

சேர சோழ பாண்டியனின் வீரம் எங்கே...?
பாரி, காரி, ஓரியின் ஈரம் எங்கே..? 
மானங்கெட்டு கூத்தடிப்பது ஞாயமா...?
மழைதுளிக்கே ஓடி மறைவது தீரமா...?

எதை பற்றியும் கவலையுறா  திருப்பது
உன் சாவுக்கே  சங்கு ஊதும் ..!
நீ யாரையும் வீழ்த்த வேண்டாம்...
உன்னையே காத்துகொள்...அது போதும்...!








No comments:

Post a Comment