20110630

இது ஒரு அன்பின் தேடல்...!

நடந்தால் நடனமாடும் 

நாட்டியச் சிலை நீ...!
அசைந்தால் ஆடிடும் 

அழகிய தீ... நீ...!

உன் ரசனையின் ரசிகன் நான்...! அட
உன் ரசிகனும் நானேதான் ...!

உன்

அழகும் ஆடையும் என்னை மடக்கின...!
சிரிப்பும் முறைப்பும் என்னை நடத்தின...!

என்ன என்னவோ வரும்...
உன் மீது எனக்கு...!

பொறுமை வரும், பொறாமை வரும்...
கடமை வரும், கவிதை வரும்...

அடக்க முடியாத ஆசை வரும்
அடங்கி முடிகிற ஆர்வமும் வரும்...!
 

உன்னோடு  நானிருந்தால்
உலகமே  தேவையில்லை...!
இருக்கும் வரை... இறக்கும் வரை....!

No comments:

Post a Comment