என் காதல் கனிமொழி...!
துளி சிதறிய தேன்மொழி..!
உன் நினைவுசாரலில் நின்றேன் நின்றபடி...!
உன் அன்பில் அடங்கினேன் நீ சொன்னபடி...!
வாழ்க்கை சொற்பமானது... ஆனாலும்
உன்னால் சொர்க்கமானது...!
அது என்ன என்று தெரியும்... ஆனாலும்
சொல்ல வசனமில்லை... வார்த்தையுமில்லை!
காதல் என்றும் சொல்லலாம்...ஆனால்
அதையும் தாண்டி இனிமையானது...!
இது மனதில் பூட்டிய மந்திரச் சாவி...!
சாவி தொலைந்த இடம்
எங்கோ ஓர் ஓரம்... ஆனால்
அது இளமை நிறைந்த சாரம்...!
போதும் என்றபோதும் பொங்கியது வெள்ளம்...
அதில் மூழ்கி முத்தெடுத்தது என் உள்ளம்...!