20110704

உன்னோடு என் உலகம்...!

உயிர்த்தெழுவேன் மீண்டும் நான்...
உயிர்த்தோழி உன்னாலே...!
நாளெல்லாம்  காத்திருப்பேன்...
நல்ல சொல்லை பார்த்திருப்பேன்...!

 
அழகு 
கண் கண்டு கலை எடுப்பேன்...!
அதையே சிலை வடிப்பேன்...!   
மீண்டும்  உன்னை சிறை பிடிப்பேன்...!


நினைத்தாலே
மழையும் தென்றலும்
மாறி மாறி வந்தது...! என்

நிலையும் நினைப்பும் 
நின்று கொன்று சென்றது ...!

 நீ இருப்பாய் என்னோடு
இதயம் இயங்கும் வரை...!

நானிருப்பேன் உன்னோடு இந்த
உலகம் உள்ள வரை...!
 

No comments:

Post a Comment