20110816

இந்திYAN...

வாழ்வோடும் சாவோடும் போராடும் மனிதர்கள் எத்தனை...
கோடிகோடியாய் கொள்ளையடிக்கும் கூட்டம் எத்தனை எத்தனை...
இவையெல்லாம் தோண்டிப்புதைக்க துடிக்கும் போராளிகள் ஒருபுறம்...
இளமையில் குளிர் காய எவரேனும் கிடைப்பாரா என ஏங்கி தவிக்கும் இளைய தலைமுறை மறுபுறம்...
இப்படியே போனால்
 
சீனன் வலை விரிப்பான் காலன் வடிவிலே...
காலம் கரைந்தோடி காலன் வரும் போது...
நாம் இருப்போம்.... நாடிருக்காது...!
எனவே...இந்த வலைப்பின்னல் வழியே விழித்தெளுவோம்
கொஞ்சம் தேசத்தின் மீது நேசம் கொள்வோம் ...!


20110811

எவன் அவன்...?

எல்லா மதங்களிலும் சாத்தன் இருக்கிறான் பேயும், பிசாசுமாக...!
சாதனை படைத்த கடவுளுக்கும்
சாத்தானை படைத்த கடவுளுக்கும்
என்ன ஒற்றுமை...? என்ன வேற்றுமை....?
அரசியல் நடத்தி ஆண்டவனும் பிழைக்கிறானோ ...?

20110726

மந்திரச் சாவி...!

அன்பே...
என் காதல் கனிமொழி...!
துளி சிதறிய தேன்மொழி..!
 

உன் நினைவுசாரலில் நின்றேன் நின்றபடி...!
உன் அன்பில் அடங்கினேன் நீ சொன்னபடி...!
 

வாழ்க்கை சொற்பமானது...  ஆனாலும்
உன்னால் சொர்க்கமானது...!
 
அது என்ன என்று தெரியும்... ஆனாலும்
சொல்ல வசனமில்லை... வார்த்தையுமில்லை!
காதல் என்றும் சொல்லலாம்...ஆனால்
அதையும் தாண்டி இனிமையானது...!
 

இது மனதில் பூட்டிய மந்திரச் சாவி...!
சாவி தொலைந்த இடம்
எங்கோ ஓர் ஓரம்... ஆனால்
அது இளமை நிறைந்த சாரம்...!
 

போதும் என்றபோதும் பொங்கியது வெள்ளம்...
அதில் மூழ்கி முத்தெடுத்தது என் உள்ளம்...! 


20110706

மஞ்சகிழங்கே...!


உன் நேசம் போதும் வாழ்நாள் தோறும்...!
உன் பாசம் தீர்க்கும் தனிமை தாகம்...!

உன் வார்த்தை சொல்லும் ஆறுதல் மொழி
உன்  பார்வை சொல்லும் ஆயிரம் மொழி...!

முன்னாள் சொர்க்கம் விண்ணில் பறந்தது
உன்னால் சொர்க்கம் மண்ணில் தெரிந்தது...!

கடவுள் என்பது இயற்கையின் கூற்று...
காதல் என்பது கடவுளின் மாற்று...!

என் எழுத்தின் சாரம் நீளமாய்ப் போகும்
அதை நிறுத்தி நினைத்தால் அழகாய் மாறும்...!
  
 நிறுத்தி நினைக்கிறேன் நினைவில் உன்னை...!

மீண்டும் வருவேன்...

காதலோடும்... இனிய கவிதையோடும்...!





20110704

உன்னோடு என் உலகம்...!

உயிர்த்தெழுவேன் மீண்டும் நான்...
உயிர்த்தோழி உன்னாலே...!
நாளெல்லாம்  காத்திருப்பேன்...
நல்ல சொல்லை பார்த்திருப்பேன்...!

 
அழகு 
கண் கண்டு கலை எடுப்பேன்...!
அதையே சிலை வடிப்பேன்...!   
மீண்டும்  உன்னை சிறை பிடிப்பேன்...!


நினைத்தாலே
மழையும் தென்றலும்
மாறி மாறி வந்தது...! என்

நிலையும் நினைப்பும் 
நின்று கொன்று சென்றது ...!

 நீ இருப்பாய் என்னோடு
இதயம் இயங்கும் வரை...!

நானிருப்பேன் உன்னோடு இந்த
உலகம் உள்ள வரை...!
 

20110630

கொல்லி மலைத்தேன்

சொல்லியது இதயம் அவள்
சொக்கத் தங்கம் என்று...!
துள்ளியது மனது... அவள் 
அல்லி
மலரினும் அழகு என்று...!
கொன்றது அவள் பிரிவு... போனேன்
கொல்லி மலைச் சரிவு...!
சா என்றது மனது...
வா என்றது அவள் நினைவு...!

கொட்டியது மழைத் தூறல்... மீண்டும்
எட்டியது அவள் நினைவுச்  சாரல்...!

ஏன் எனத்  தெரியவில்லை... அவள்
தேன் என்பது தெரிந்த உண்மை...! 
அன்றும் இன்றும்  
எனக்காக ஒன்றும் இல்லை... இனி உனக்காகவே வாழ்வின் எல்லை...!





இது ஒரு அன்பின் தேடல்...!

நடந்தால் நடனமாடும் 

நாட்டியச் சிலை நீ...!
அசைந்தால் ஆடிடும் 

அழகிய தீ... நீ...!

உன் ரசனையின் ரசிகன் நான்...! அட
உன் ரசிகனும் நானேதான் ...!

உன்

அழகும் ஆடையும் என்னை மடக்கின...!
சிரிப்பும் முறைப்பும் என்னை நடத்தின...!

என்ன என்னவோ வரும்...
உன் மீது எனக்கு...!

பொறுமை வரும், பொறாமை வரும்...
கடமை வரும், கவிதை வரும்...

அடக்க முடியாத ஆசை வரும்
அடங்கி முடிகிற ஆர்வமும் வரும்...!
 

உன்னோடு  நானிருந்தால்
உலகமே  தேவையில்லை...!
இருக்கும் வரை... இறக்கும் வரை....!

20110523

ச்சும்மா ஒரு Rhymiங்கான‌ கேள்வி...

ஆட்சி மாறிடுச்சு...!
க‌ட்சி மாறிடுச்சு...!
அவங‌க‌ல‌ கைது கூட‌ ப‌ண்ணிட்டாங‌க‌...!

ம‌க்க‌ள் மாறிட்டாங‌க‌ளா...?
எது இல‌வ‌ச‌மா கிடைக்கும்னு தானே
அலையுறாங‌க‌...!

         


இது ந‌ட‌ந்தா... அப்புற‌ம் அதுவும் ந‌டக்கும்...!
 அது ந‌ட‌ந்தா...அப்புற‌ம் இதுவும் ந‌டக்கும்...!

                                                    ஐந்து வ‌ருட‌ம் க‌ழித்து
                                                    ஆட்சி மாறிடும்...!
                                                    க‌ட்சியும் மாறிடும்...!
                                                     அவங‌க‌ல‌ கைது கூட‌ ப‌ண்ணிடுவாங‌க‌...!

                                                    ஆனால் ம‌க்க‌ள் மாறிடுவாங‌க‌ளா...?

20110509

கொஞ‌ச‌ம் க‌விதை

 
அவள் ஒரு ப‌ருவ‌கால‌ம்...!

அவ‌ளிட‌மிருந்து
சில‌ நேரம் ஜில்லென்ற தென்றல் வ‌ரும்
சில‌ நேரம் சுல்லென்ற சூரிய‌ன் வ‌ரும்...!

அதில்

காத்திருந்தால் காத‌ல் வ‌ரும்
க‌ட‌ந்து சென்றால் ஞான‌ம் வ‌ரும்...!

20110414

சினிமா விம‌ர்ச‌ன‌ம்






எந்திரன்: இன்டர்நேஷ‌னல் ம‌ல்லிப்பூவ‌ லோக்க‌லா காதுல சுத்துங‌கோ...ம்ம்ம் ந‌ன்னா ச்சுத்துங்கோ...! இப்போ புரிஞ்சுன்டேளா...!



 


காவ‌ல‌ன்: காத்திருந்தவ‌ன் பொண்டாட்டிய‌ நேத்து வ‌ந்த‌வ‌ன் கூட்டி போனானாம் - அப்ப‌டியே கொஞ‌ச‌ம்
உல்டா அடிச்சா அதான்பா க‌தை!



இளைஞன்: நீங‌க‌ அவர‌ச் சொல்றீங்க‌ளா...? இல்ல‌ அவ‌ரு உங்க‌ள‌ சொல்றாரா...? ப‌ண‌ம் ப‌த்தும் செய்யும்... ப‌தினொன்னாவ‌தா சினிமாவும் செய்யும்போல...! எப்ப‌டியோ விஜ‌ய் ஸார்... உங்க‌ளுக்கு மார்ட்டின் லாட்ட‌ரி அடிச்சுருச்சு...!  



ல‌த்திகா:எரியுர‌ நெருப்புல‌ ஏன் ஸார் எண்ண‌ய‌ ஊத்துறீங்க‌... ப்ளீஸ் உடுங்க‌ ஸார்... நாங்‌‌க‌ போஸ்டர் பார்த்தே சிரிச்சுட்டு போறோம்! 
(ப‌ண‌ம் ப‌தினொன்னாவ‌தா சினிமாவும் செய்யும்னு சொன்னேன்ல... இப்பவாவ‌து ந‌ம்புங்‌‌க...!)

விலைவாசி...!

 
அரிசி முப்ப‌து
ப‌ருப்பு அறுபது...!
ஏழையின் சிரிப்பில்
அழகிய‌ பூனைக்குட்டி...!




அவ‌ள் 
சிரிப்பில்
என் க‌ற்பு

க‌ரையானது...!


அவ‌ள்...!
 

கருப்பான‌ தேக‌ம்தான் ஆனாலும்
க‌னியாடும் கான‌க‌ம்...!
தேர் போன்ற ந‌டை... அதில்
தேன் த‌ட‌விய‌ இடை...!

இளமையாடும் வேகம்... அதனால்
இமைமூடும் மேகம் ... 
நீ கலையான சிலை...
எனினும்  விரிக்காதே வலை ..!



க‌ல்லை உறுமாற்றினால் அது சிலை!
சிலையை க‌லையாக்கினால்
அது நாத்திக‌ம்!
க‌லையை க‌ட‌வுள் ஆக்கினால்
அது ஆத்திக‌ம்!


விவ‌சாய‌ம்...!
அன்று
உணவுக்கான தொழில்
இன்று
அது ஒரு த‌ற்கொலை முய‌ற்சி...!






ம‌னிதனுக்கு ம‌ண்ணாசை...
ப‌றந்தான் நிலவுக்கும்...!

20110409

ஏ....கடலே...!

தாயேவென்று உன்னை வணங்கிணோமே...!
தண்ணீர் என்று நாங்கள் சுணங்கிணோமா?

என்ன கோபம் எங்கள் மீது...?
ஏன் இந்த சீற்றம் என் மக்கள் மீது...?

மாற்றம் வேண்டுமெனில் நீ மாற்றிக்கொள்...!
சீற்றம் வேண்டாம் எங்கள் மீது...!

சுறுசுறுப்பாய் இயங்கும் எஙகள் ஜப்பான் மீது
சுனாமி உமிழ்ந்து சுக்குணூறாக்கினாய்...!

எத்தனையோ யுத்தத்தினால்
யுத்த சத்தத்தினால் ரத்தம் கண்ட புத்த பூமியது!
 
நின்று நிதானித்து யோசித்தால்
நீ எங்களுக்கு கொடுத்ததெல்லாம் கோடிகோடிதான்...!
அதற்காக திடீரென்று எல்லாம் பறித்து
என் மக்களை நிறுத்தியதேன் தெருக்கோடியில்...?

இச்சையால் பச்சைக்கு நாங்கள் பங்கம் செய்தோம்
தெரிந்தும் தெரியாமலும் இயற்கை விதிகளை
கொஞ்சம் கொஞ்சமாக மீறினோம்
அதற்காக பூமியில் தஞ்சம் வந்த எங்களை
கொத்துக்கொத்தாக கொன்று குவிப்பது ஞாயமா?

எங்களுக்குள் சண்டை, சமாதானமாய் வாழ்ந்து போகிறோம்
இடையில் நீ வந்து
தண்ணீரால் தாயம் போடாதே...!

எங்களுக்குள் நாங்களே
கந்தகம் வீசீ குந்தகம் செய்கின்றோம்
மாற்றான் தோட்டத்தில் மாடு மேய்த்தும் மகிழ்கின்றோம்
அதற்காக நீ கூற்றானோடு கூட்டு வைத்து
எங்களுக்கு கூண்டோடு வேட்டு வைக்காதே...!

வாழ்விலும் சாவிலும் உன்னை
வணங்கித்தானே வாழ்ந்துகொண்டிருக்கிறோம்...!

எங்கள் கண்ணீரால் உன் கைகளை கழுவ நினைக்காதே...!

எங்களுக்கு பூமிதான் சாமி... கடல்
எங்கள் பூமியின் சாமி...!

உன் சிரிப்பொலியில்...
வானம் கருவாகும்...
மழைவெள்ளம் தெருவாகும்...

வனமெல்லாம் வாசம் வீசீ
மனசெல்லாம் பாசம் தூவீ
என் வழ்க்கையே நிறம் மாறும்...!

வந்துவிடு என்னோடு
உன் மனமே என் கூடு...!